தற்போது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக கலக்கி கொண்டு வருபவர் நடிகை நயன்தாரா. இப்படி புகழின் உச்சத்தில் இருந்து வரும் நயன்தாராவுக்கு சமீபத்தில் வெளியான ஜவான் படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது . இதையடுத்து தற்போது இறைவன் , டெஸ்ட் , மண்ணாங்கட்டி , நயன்தாரா 75 என்று ஐந்து படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா .
அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார் நடிகை நயன்தாரா. பின்னர் கணவருடன் சேர்ந்து தற்போது பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் . அப்படி அதன் மூலம் பல கோடிகளை கல்லாகட்டி வருகிறார் நடிகை நயன்தாரா .
இப்படி இருக்கும் நிலையில் சினிமாவை தாண்டி தொழிலிலும் கல்லா கட்ட இருக்கிறார், நடிகை நயன்தாரா . அந்த வகையில் வருகின்ற 29ஆம் தேதி 9 ஸ்கின் என்ற அழகு சாதன கம்பெனியை தொடங்க இருக்கிறாராம் நடிகை நயன்தாரா . அப்படி தன்னுடைய கம்பெனியை,
பிரபலபடுத்துவதற்காக நடிகை நயன்தாராவே அந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் அறிமுகப்படுத்திய கிரீம்மை முகத்தில் தேய்த்தால் சருமத்தின் கதிரியக்க பளபளப்பை மீண்டும் தூண்டுமாம் , அதே வேளையில், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை,
மென்மையாக்கி விடுமாம் . இதனால் எப்போதும் முகம் பொலிவாகவும் , இளமையாகவும் இருக்குமாம். இதை பார்த்த ரசிகர்கள் முதலில் இந்த கிரீம்மை உங்க மூஞ்சில தடவுங்க என்று கூறி வருகின்றனர்…
View this post on Instagram