தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார் . அமராவதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய அஜித் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதையடுத்து தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித்.
இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் எந்த நடிகர்களிடமும் இல்லாத ஒரு நல்ல பழக்கம் அஜித்திடம் இருக்கிறது . அது என்னவென்றால் ஹீரோயிசம் என்றால் அஜித்தை பார்த்து தான் மற்ற நடிகர்கள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் . காரணம் அஜித்,
ஒரு கட்டத்தில் தல என்று அடைமொழி வைத்து இனிமேல் யாரும் என்னை கூப்பிட வேண்டாம் என்று அறிவித்து இருந்தார் . அதோடு ரசிகர்களின் நலனை கருதி தனக்கு இனிமேல் ரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொன்னவர் அஜித் . அது மட்டுமல்லாமல் என்னுடைய படம்,
நல்லா இருந்தா மட்டும் பாருங்க இல்லைனா பார்க்க வேண்டாம் என்று தைரியமாக சொல்லியவர் நடிகர் அஜித் . அந்த அளவிற்கு தானும் உயர வேண்டும் தன்னுடைய ரசிகர்களும் உயர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் நடிகர் அஜித் . ஆனால் அஜித்துக்கு இருந்த தைரியம்,
மற்ற நடிகர்களுக்கெல்லாம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பக ரஜினி, விஜய் போன்ற பல நடிகர்கள் தன்னுடைய ஆதாயத்திற்காக மட்டும் தான் ரசிகர்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது …