குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் வரிசையில் இடம் பெற்று இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை தொடர்ந்து கைதி ,மாஸ்டர், விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார். இதை அடுத்து இரண்டாவது முறையாக விஜய் உடன் இணைந்து லியோ என்ற படத்தை ,
எடுத்து முடித்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் . இந்த திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்நிலையில் லியோ படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளை கொடுத்து வரும் லோகேஷிடம் ஏன் நீங்கள் ஜாதி , அரசியல் பற்றிய படங்களை எடுப்பதில்லை என்று,
கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு பதில் அளித்த லோகேஷ் கூறியதாவது, நான் ஒரு கமர்சியல் இயக்குனர் என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். நான் ஜாதி, அரசியல் பற்றிய படங்களை எடுக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமே எனக்கு அதில் போதிய அளவு அறிவில்லை என்று தான்,
சொல்ல வேண்டும். குறிப்பாக பாதி அறிவு என்பது எப்போதுமே ஆபத்தான ஒன்றுதான். அப்படி பாதி அறிவுடன் ஒரு விஷயத்தை எப்படி செய்ய முடியும் . அதனால் அந்த விஷயத்தை தெரியாது என்று ஒப்புக் கொள்வதுதான் சரியான ஒன்று . மேலும் ஒரு இயக்குனராக இருக்கும் எனக்கு,
அரசியலில் போதிய அறிவில்லை என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை தான், இருந்தாலும் அதுதான் நூறு சதவீதம் உண்மை . இன்னும் சொல்லப் போனால் என்னுடைய தேடல் வேறு எங்கேயோ இருக்கிறது என்று தெளிவாக விளக்கம் கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்…