இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இளையராஜாவின் இசை நின்று பேசும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது . அப்படி அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா இன்று வரை தமிழ் ரசிகர்களை தன்னுடைய இசை மழையில் நனைய வைத்து வருகிறார் . அதுவும் அப்போது முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை ,
பாரபட்சம் பார்க்காமல் அவர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார் இளையராஜா .அதுவும் இவருடைய பாடலுக்காகவே ஓடிய படங்களும் உண்டு . அப்படி அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்து வந்த ரஜினி ,கமல் ,விஜயகாந்த் ,கார்த்திக் ,பிரபு ,
சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்தார் இளையராஜா . ஆனால் இசையால் ரசிகர்களை கவர்ந்த இளையராஜா அவ்வப்போது தன்னுடைய வாயால் பெயரைக் கெடுத்துக்கொள்கிறார் . அப்படி எதையும் யோசிக்காமல் பேசும் இளையராஜா ,
விஜயகாந்த் திருமணத்திலும் ஒரு சம்பவம் செய்திருக்கிறார். அது என்னவென்றால் விஜயகாந்தின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜா “எடுத்து வச்ச பாலும் விரிச்சி வச்ச பாயும் வீணாகத்தான் போகுது” என்ற பாடலை பாடி இதை அவருடைய மனைவி பிரேமலதா ,
பாடாதவாறு விஜயகாந்த் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் .குறிப்பாக இது விஜயகாந்த் நடிப்பில் வெளியான நினைவே ஒரு சங்கீதம் படத்தின் ஆகும் . இதை பார்த்த ரசிகர்கள் தலைவன் அப்பவே அப்படி போல என்று கூறி வருகின்றனர்…