சினிமாவைப் பொறுத்தவரை திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் திறமையோடு சில நேரங்களில் அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியும். அதற்கு ஒரு உதாரணம் நடிகர் கரண் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கரண் அண்ணாமலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில்,
பிரபலமானது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தின் மூலம் தான். இந்த படத்தில் கமலுக்கே டப் கொடுக்கும் வகையில் நடித்து அசத்தியிருந்தார் கரண் . இதனால் முதல் படத்திலேயே அடுத்த கமல் இவர்தான் என்றெல்லாம் பேசப்பட்டார் கரண் . பின்னர் இந்த படத்தை,
தொடர்ந்து சந்திரலேகா ,கோயம்புத்தூர் மாப்பிள்ளை ,காதல் கோட்டை ,கோகுலத்தில் சீதை, காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே ,காதல் மன்னன் ,கண்ணெதிரே தோன்றினாள், சொல்லாமலே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் . இன்னும் சொல்ல போனால் இவர்,
பல திரைப்படங்களில் வில்லனாகவும் ,இரண்டாம் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார் . இதனாலேயே அப்போது இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது . இதன் பிறகு தனியாக ஹீரோவாக நடித்த தொடங்கினார் கரண் . ஆனால் இவர் தேர்வு செய்த கதைக்களங்கள்,
எல்லாம் இவரை அப்படியே கீழே இறக்கியது . இவர் திடீரென சினிமாவை விட்டு விலகியதற்கு காரணமே இவர் சரியாக கதை தேர்வு செய்யவில்லை என்று தான் கூறப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட இவர் மீண்டும் நடிக்க வருவாரா என்று ரசிகர்கள் ஏங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்…