April 30, 2024

முதல் படத்திலேயே “அடுத்த கமல் ” என்று பெயரெடுத்த கரண்..!! இப்ப இவர் காணாமல் போனதற்கு இது தான் காரணமா ..??

சினிமாவைப் பொறுத்தவரை திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்று கூறுவார்கள்.  ஆனால் திறமையோடு சில நேரங்களில் அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியும்.  அதற்கு ஒரு உதாரணம் நடிகர் கரண் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கரண்  அண்ணாமலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில்,

பிரபலமானது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தின் மூலம் தான்.  இந்த படத்தில் கமலுக்கே டப் கொடுக்கும் வகையில் நடித்து அசத்தியிருந்தார் கரண் . இதனால் முதல் படத்திலேயே அடுத்த கமல் இவர்தான் என்றெல்லாம் பேசப்பட்டார் கரண் . பின்னர் இந்த படத்தை,

தொடர்ந்து சந்திரலேகா ,கோயம்புத்தூர் மாப்பிள்ளை ,காதல் கோட்டை ,கோகுலத்தில் சீதை, காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே ,காதல் மன்னன் ,கண்ணெதிரே தோன்றினாள், சொல்லாமலே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் . இன்னும் சொல்ல போனால் இவர்,

பல திரைப்படங்களில் வில்லனாகவும் ,இரண்டாம் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார் . இதனாலேயே அப்போது இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது . இதன் பிறகு தனியாக ஹீரோவாக நடித்த தொடங்கினார் கரண் . ஆனால் இவர் தேர்வு செய்த கதைக்களங்கள்,

எல்லாம் இவரை அப்படியே கீழே இறக்கியது . இவர் திடீரென சினிமாவை விட்டு விலகியதற்கு காரணமே இவர் சரியாக கதை தேர்வு செய்யவில்லை என்று தான் கூறப்படுகிறது.  அப்படி இருந்தாலும் கூட இவர் மீண்டும் நடிக்க வருவாரா என்று ரசிகர்கள் ஏங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *