தமிழ் சினிமா உலகில் கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நாட்டாமை. இந்தப் படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் வரும் நடிகை ராணி பெரிய அளவில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக நாட்டாமை டீச்சரை இன்றளவும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அப்படி கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான,
வில்லுப்பாட்டுக்காரன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ராணி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நம்ம அண்ணாச்சி, ராசையா, கர்ணா ,அவ்வை சண்முகி, காதல் கோட்டை ,ஜெமினி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .
மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலில்,
நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ராணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் நாட்டாமை பட டீச்சரா இது .? ஆளே மாறிவிட்டாரே என்று கூறுகின்றனர் …