தமிழ் சினிமா உலகில் மூத்த முன்னணி நடிகராக கலக்கி கொண்டு வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகர் என்ற அந்தஸ்திலிருந்து வரும் ரஜினியுடன் நடிப்பதற்கு பல நடிகைகள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர் . அப்படி இருக்கும் போது ரஜினியுடன் நான்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் முடியாது என்று மறுத்திருக்கிறார் ,
ஒரு நடிகை, அவர் வேறு யாரும் இல்லை நடிகை நளினி தான். கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ராணுவ வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நளினி தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, மனைவி சொல்லே மந்திரம் ,நூறாவது நாள் ,தங்கைக்கோர் கீதம், போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .
இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நளினி. மேலும் தவிர்க்க முடியாத நடிகையாக கலங்கி கொண்டு வந்த நளினிக்கு ரஜினியுடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததாம் . அந்த வகையில் தங்க மகன் ,மாவீரன் , தம்பிக்கு எந்த ஊரு , கை கொடுக்கும் கை ,
போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு நளினிக்கு வந்ததாம் . அப்படி கிடைத்த படங்களில் எல்லாம் நளினி நடித்தாராம் . ஆனால் அந்தப் படத்தில் பாதி நாட்கள் நடிப்பாராம், மீதி பாதி நாட்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று விலகி விடுவாராம் . இப்படித்தான் இந்த நான்கு படங்களிலும் ,
பண்ணியிருக்கிறார் நடிகை நளினி . ஆனால் இவர் எதற்காக இப்படி பாதி நாட்களில் நடித்து இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது தெரியவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது எனக்கு இதைப் பற்றி தெரியல , எனக்கு ஏதோ பைத்தியம் என்று பதிலை சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார் நடிகை நளினி…