தற்போது தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் ஆரம்பத்தில் ஹீரோவாக கலக்கிக்கொண்டு வந்த விஜய் சேதுபதி தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரட்டி வருகிறார் . இப்படி மக்கள் செல்வனாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விஜய் சேதுபதிக்கு சமீப காலமாக அவர் ஹீரோவாக நடித்த எந்த ஒரு படங்களும் கை கொடுக்கவில்லை,
என்று தான் சொல்ல வேண்டும் . இதனால் தற்போது விஜய் சேதுபதியை மக்கள் ஒரு வில்லனாக மட்டும் தான் கொண்டாடி வருகின்றனர் . காரணம் தொடக்கத்தில் கதையை தேர்வு செய்தது போல இப்போது விஜய் சேதுபதி கதையை தேர்வு செய்வது கிடையாது. கிடைக்கும்,
கதைகளில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டு வருகிறார் . இந்நிலையில் வேலியில் போற ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாக மீண்டும் அந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் விஜய் சேதுபதி . அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பொன்ராம் தான் .
வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த பொன்ராம் இயக்கத்தில் டி எஸ் பி என்ற படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி . கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் அட்டர் பிளாப் படமாக அமைந்தது. இன்னும்,
சொல்லப்போனால் இப்படி ஒரு படம் வந்ததா என்பது பலருக்கும் தெரியாது . இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் பொன்ராமுடன் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளாராம் நடிகர் விஜய் சேதுபதி . இதை பார்த்த ரசிகர்கள் வேண்டவே வேண்டாம் என்று கதறி வருகின்றனர்…