சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீகத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இதனாலேயே வருடத்தில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் நிம்மதியை தேடி இமயமலைக்கு சென்று விடுவார். இப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்தை முடித்த கையோடு இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் தற்போது மீண்டும் இமயமலைக்கு செல்ல உள்ளதாக,
தகவல் வெளியாகி உள்ளது . அதற்கு காரணம் அவர்களுடைய மகள்கள் தானாம். அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம் . இந்த படத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .
இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். ஆனால் இப்படி வெளியான திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இப்படி இருக்கும் நிலையில் தற்போது ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ஒரு படத்தை இயக்கி வருகிறாராம்.
அந்த படத்திலும் சூப்பர் ஸ்டாரை கெஸ்ட் ரோலில் நடிக்க சொல்லி அடம் பிடித்து வருகிறாராம். ஏற்கனவே இளைய மகள் இயக்கத்தில் வெளியான கோச்சடையான் படத்தில் நடித்து பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து இருந்தார் ரஜினி. இருந்தாலும் மகளின் ஆசையை,
நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறாராம் . இதனால் மீண்டும் இமயமலைக்கு சென்றால் ஒரு தெளிவு கிடைக்கும் என்று முடிவில் இருக்கிறாராம் ரஜினிகாந்த்…