தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்தான் நடிகர் அஜித். துணிவு படத்தை முடித்த அஜித் அடுத்ததாக விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் நடிகர் அஜித் பைக் ட்ரிப் சென்றுள்ளதால் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் அஜித்திடம் எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக,
கூறியுள்ளார் நடிகை தமன்னா. அந்த வகையில் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை தமன்னா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் .
அப்படி பல முன்னணிகளுடன் இணைந்து நடித்த நடிகை தமன்னா கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வீரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் . இந்த படத்தில் இருவருக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது . இப்படியொரு ,
நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தமன்னாவிடம் நடிகர் அஜித்தை பார்த்தால் அவரின் தலைமுடிக்கு டை அடிக்க சொல்வீர்களா என்று கேள்வி எழுப்புள்ளனர். அதற்கு பதிலளித்த நடிகை தமன்னா , நான் வீரம் படத்தில் நடிக்கும் போதே இதை,
சொல்ல நினைத்தேன் . அவரிடம் அது எனக்கு சுத்தமாக பிடிக்கல, ஆனா அப்போது எனக்கு இதைப் பற்றி சொல்லும் அளவிற்கு தைரியம் இல்லை . ஆனால் இப்போது பார்த்தால் கண்டிப்பாக இதைப்பற்றி சொல்வேன் என்று கூறியிருந்தார் நடிகை தமன்னா…