தற்போது தமிழ் சினிமா ரசிகரின் பேவரைட் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் மேலே வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அப்படி ஆரம்பத்தில் தொடர்ந்து காமெடி படங்களை தேர்வு செய்து நடித்து வந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் நடிப்பிற்கும் , கதைக்கும் முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை ,
தேர்வு செய்து தற்போது பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். குறிப்பாக சமீபத்தில் இவருடன் நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது . இதைத்தொடர்ந்து அடுத்ததாக ,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் கே 21 என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக ,
வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து இருக்கிறார் சிவகார்த்திகேயன் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ம சிவகார்த்திகேயனா இது .? ஆளே அடையாளம் தெரியலையே என்று கூறி வருகின்றனர்…