May 6, 2024

வேண்டா வெறுப்பாக நடித்து தேசிய விருது வாங்கிய நடிகை ..!! காலத்துக்கும் நின்னு பேசும் கதாபாத்திரம் ..!! பொறுமையால் கிடைத்த பெருமை ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கியது ஒரு சில நடிகைகள் மட்டும்தான் . அப்படி வேண்டா வெறுப்பாக நடித்து தேசிய விருது வாங்கி அசத்தியிருக்கிறார் ஒரு நடிகை . அவர் வேறு யாருமில்லை நடிகை பிரியாமணி தான்.  கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமாகி இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது,

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் தான்.  இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் பிரியாமணி ,பொன்வண்ணன் ,சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான,

திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . குறிப்பாக இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் நடிகை பிரியாமணி.  ஆனால் இந்த படத்தில் நடிக்கும் போதிலிருந்து இவருக்கும் இயக்குனருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வந்ததாம் .

பின்னர் ஒரு முறை சண்டை முத்தி போய் படப்பிடிப்பை விட்டு கிளம்பி விட்டாராம் நடிகை பிரியாமணி . பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை மீண்டும் பருத்திவீரன் படத்தில் வேண்டா வெறுப்பாக  நடிக்க வந்திருக்கிறார் நடிகை பிரியாமணி . இதன் பிறகு இயக்குனரின்,

பேச்சை பொறுமையாக கேட்டு நடித்த பிரியாமணிக்கு கடைசியில் தேசிய விருதே  வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் சம்பளத்தையும் சேர்த்து கொடுத்திருக்கிறார்  இயக்குனர் அமீர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *