தமிழ் சினிமா உலகில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு கதாபாத்திரத்திற்காக எந்த அளவிற்கு மெனக்கெடுப்பவர் நடிகர் விக்ரம் அவர்கள். கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விக்ரம் . ஆனால் இந்தத் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை . இதன் பிறகு 23 படங்களுக்குப் பிறகுதான் ,
விக்ரம் என்றால் யார் என்று ரசிகர்களுக்கு தெரிய தொடங்கியது . அப்படி அவருக்கு அங்கீகாரம் கொடுத்த திரைப்படம் தான் சேது . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து தில் , காசி ,ஜெமினி, தூள், சாமி, பிதாமகன் ,அருள் ,அந்நியன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ,
தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் விக்ரம். தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம் . இதைத்தொடர்ந்து தற்போது இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் விக்ரம்.
இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் விக்ரம் அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் விக்ரமுக்கு 57 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என்று கூறி வருகின்றனர்…