விஜய் தொலைக்காட்சியை கலக்கி வரும் முக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் கே பி ஒய் பாலா. ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தொடர்ந்து தமிழில் வெளியான ஜூங்கா , புலிக்குத்திப்பாண்டி , நாய் சேகர் , பிரண்ட்ஷிப் , ரன் பேபி ரன் போன்ற பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அண்மை காலமாக இவர் செய்து வரும்,
உதவிகள் அனைத்தும் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை ஏழை மக்களுக்காக ஐந்து இலவச ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார் பாலா . இப்படி இருக்கும் நிலையில் பாலா குறித்து அவருடைய அம்மா கூறியதாவது ,
பாலா பத்தாம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண் எடுத்தான். முதல் குரூப் எடுக்க வைத்து அவனை டாக்டர் ஆக்கலாம் என்று நினைத்தேன் , ஆனால் இப்போது ஆக்டர் ஆகிவிட்டான் என்று பெருமையாக கூறியிருந்தார்…