தமிழ் சினிமா உலகில் இயக்குனர், நடிகர் ,நடன கலைஞர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருபவர் பிரபுதேவா. இவருக்கு ராஜூ சுந்தரம் என்ற அண்ணனும், நாகேந்திர பிரசாத் என்ற தம்பியும் இருக்கின்றனர் . இன்னும் சொல்லப் போனால் இவர்களுடைய குடும்பமே நடன குடும்பம் தான். இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்குள் மனக்கசப்பு ,
ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பிரபுதேவாவின் தம்பியான நாகேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் கூறியதாவது , எங்களுடைய வீட்டில் என்னோட அண்ணனுக்கு தான் அதிக மதிப்பு இருக்கிறது . மேலும் யாரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ, அவர்களைத்தான் இந்த சமுதாயம்,
மதிக்கும் . அந்த மாதிரி தான் எங்களுடைய வீட்டிலும் பிரபுதேவா சொல்வது தான் நடக்கும் . அவர் சொல்வதை தான் அம்மாவும் கேட்பார்கள்,காரணம் அவர் தான் அதிகம் சம்பாரிக்கிறார் என்று மனமடைந்து கூறியிருந்தார் நாகேந்திர பிரசாத்…