இசைஞானி இளையராஜா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட மூத்த இசையமைப்பாளர் ஆவார். அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசைப்பயணத்தை தொடங்கிய இளையராஜா இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் . அதுவும் அப்போதைய காலகட்டத்தில் ஒரு சில இயக்குனருடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வந்தார் இளையராஜா. அதில் முக்கியமானவர் தான்,
இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார் . அதோடு அந்தப் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவும் ஒரு காரணமாக இருந்து வந்தார் . இப்படி இருக்கும் நிலையில் 30 வருடங்கள் கழித்து மீண்டும் பாரதிராஜாவும்,
இளையராஜாவும் இணைந்துள்ளனர் . அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் தான் நடிகர் மனோஜ். தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் அறிமுகமான மனோஜ் இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதை அடுத்து தற்போது இயக்குனர் அவதாரம்,
எடுத்திருக்கிறார் மனோஜ் . அப்படி தான் எடுக்கும் முதல் படத்திலேயே அப்பாவையும் நடிக்க வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மார்கழி திங்கள் படத்திற்காக இளையராஜாவின் இசையில் பாடல் ஒன்று உருவாகி வருகிறதாம் . இந்த பாடல் அனைவரையும் மயக்கும் என்று,
கூறப்படுகிறது . மேலும் 3௦ வருடங்கள் கழித்து இரண்டு ராஜாக்களும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஒரு சிலர் எத்தனை நாள் ஆச்சு இவர்களை இப்படி பார்த்து என்று பூரிப்பில் கூறி வருகின்றனர்…