கீர்த்தி பாண்டியன் ஓர் வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார் . நடிகர் அருண் பாண்டியனின் மகளான ரம்யா பாண்டியன் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது தும்பா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து அன்பிற்கினியாழ் ,கண்ணகி ,சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை கீர்த்தி பாண்டியன்.
குறிப்பாக ப்ளூ ஸ்டார் படத்தில் நடிக்கும் போது கீர்த்தி பாண்டியனுக்கும் , அசோக் செல்வனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது . பின்னர் கடந்த வருடம் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . மேலும் திருமணமான பிறகும் இருவரும் படங்களில் ,
பிஸியாக நடித்துக்கொண்டு வருகின்றனர் . அதோடு ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமலும் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் கீர்த்தி பாண்டியனுக்கு பிறந்தநாள் வர இருக்கிறதாம் . அதை வெளிநாட்டில் இப்போது கொண்டாடி,
கணவருடன் சேர்ந்து கொண்டடி இருக்கிறார் கீர்த்தி பாண்டியன் . அப்போது எடுத்த மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் கீர்த்தி பாண்டியன் . இதை பார்த்த ரசிகர்கள் கல்யாணமான பிறகும் இப்படியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…