தற்போது இந்திய சினிமா உலகில் பிரபல இளம் நடிகையாக கலக்கி கொண்டு வருபவர் நடிகை மிருணாள் தாகூர் . ஆரம்பத்தில் சீரியலில் நடித்து பிரபலமான மிருணாள் தாகூர் பின்னர் ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வந்தார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் என்ற படத்தின் மூலம் தான். இந்த படத்தில் ,
சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்னுடைய அழகால் ஈர்த்துவிட்டார் மிருணாள். இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் லவ் சோனியா என்ற படத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய தன்னுடைய அக்காவை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாராம் மிருணாள் தாகூர். அப்படி அந்த கதையில் நடிப்பதற்காக ஒரு விபச்சார பெண் இருக்கும் இடத்திற்கு சென்று இருக்கிறார்.
ஆனால் அங்கு இருந்த கட்டில் மிகவும் உயரமாக இருந்ததாம். இதன் பிறகு அந்த பெண்ணிடம்மிருணாள் தாகூர் அதைப்பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண், வாடிக்கையாளர்கள் வரும்போது என்னுடைய குழந்தை கீழே தூங்கிக் கொண்டிருக்கும் . அதனால் தான் இவ்வளவு உயரமாக ,
கட்டில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் . அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 40 இல் இருந்து 50 பேர் வருவார்களாம் . அதனால் எந்த உணர்வும் இல்லாமல் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த விஷயத்தை சமீபத்தில் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார் நடிகை மிருணாள் தாகூர்…