உதயநிதி ஸ்டாலின் ஓர் தமிழ் திரைப்பட நடிகர் ,தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ,கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன்,
பொதுவாக எம்மனசு தங்கம் ,இப்படை வெல்லும் ,நிமிர், சைக்கோ பல திரைப்படங்களில் நடித்து வந்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் . ஆனால் தற்போது அரசியலில் களம் இறங்கி விட்டதால் மாமன்னன் படத்தோடு தன்னுடைய திரை பயணத்தை முடித்துக் கொள்வதாக கூறியிருந்தார் .
இதனிடையே கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி தன்னுடைய காதல் குறித்தும் , தன்னுடைய மகனை ,
பற்றியும் பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது, நானும் கிருத்திகாவும் எட்டு வருடமாக காதலித்து வந்தோம் . இதன் பிறகு அப்பாவிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி இதைப் பற்றி அவரிடம் கூறி சம்மதம் வாங்கினேன் . மேலும் இப்போதெல்லாம் காதல் திருமணம்,
என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. தற்போது என்னுடைய மகனும் நான் பண்ணுனதை விட லூட்டி அடிச்சிட்டு இருக்கான். அவன் கிட்டயும் வயசுக்கு ஏத்த மாதிரி பார்த்து பண்ணுப்பா என்று கூறினேன் என்று வெளிப்படையாக சொல்லி இருந்தார் உதயநிதி ஸ்டாலின்…