தற்போதுள்ள பல முன்னணி இயக்குனர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருபவர் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாரதி ராஜா கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ,நிறம் மாறாத பூக்கள் ,நிழல்கள்,
அலைகள் ஓய்வதில்லை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி இயக்குனராக கலக்கிக்கொண்டு வந்த பாரதிராஜா தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் பாரதிராஜாவுக்கு மனோஜ் என்ற மகனும்,
ஜனனி என்ற மகளும் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் மகனை விட சினிமா தான் முக்கியம் என்று பாரதிராஜா செய்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தை ராஜ்கண்ணு என்பவர் தயாரித்திருந்தார் .அதற்கு அட்வான்ஸ் பணமாக,
பாரதி ராஜாவிடம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு படத்தை ஆரம்பியுங்கள் என்று கிளம்பி விட்டாராம் . ஆனால் அப்போது பாரதிராஜாவின் குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்ததாம். குறிப்பாக அவருடைய மகனுக்கு பால் வாங்கக்கூட காசு இல்லாமல் தவித்து வந்தாராம் பாரதிராஜாவின் மனைவி.
அப்போது அந்த பத்தாயிரம் ரூபாய் பணத்திலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள நினைத்திருக்கிறார் பாரதிராஜாவின் மனைவி. ஆனால் பாரதிராஜா இது முதலாளி கொடுத்த காசு என்று தர மறுத்து விட்டாராம் . இதன் பிறகு படப்பிடிப்பிற்கு சென்று விட்டாராம் பாரதிராஜா.அப்போது அடிக்கடி கடிதம் எழுதி,
அனுப்பியிருக்கிறார் அவருடைய மனைவி . பின்னர் எதர்ச்சியாக இந்த கடிதம் தயாரிப்பாளர் ராஜ் கண்ணு கண்ணில் பட்டு இருக்கிறது. இதன் பிறகு தான் அவர் பாரதிராஜாவின் வீட்டு செலவுக்கான பணத்தை கொடுத்திருந்தாராம். அந்த அளவிற்கு சினிமாவின் மீது உயிராக பாரதிராஜா இருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது …