தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் கோடி கோடியாக சம்பாதித்தாலும், அதை அவர்களே தான் அனுபவித்து வருகிறார்கள் . ஆனால் சூர்யா போன்ற ஒரு சில நடிகர்கள் தங்கள் சம்பாதிப்பதில் பாதியை ஏழை எளிய மக்களுக்கு செலவு செய்து வருகின்றனர். அப்படி நடிகர் சூர்யா “அகரம் அறக்கட்டளை ” என்ற ஒன்றை தொடங்கி பல ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சத்தமே இல்லாமல் ,
பல உதவிகளையும் செய்து கொண்டு வருகிறார் . இப்படி அண்ணன் சூர்யா ஊரே போற்றும் அளவிற்கு உதவி செய்து வரும் நிலையில் தம்பி கார்த்தி மனசாட்சியே இல்லாமல் மட்டமான வேலையை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அங்காடி தெரு படத்தில் நடித்திருந்த நடிகை சிந்து மார்பக புற்று நோயால் ,
பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் இவர் இறப்பதற்கு முன்பு பல நடிகர்களிடம் உதவி கேட்டு இருந்தார். ஆனால் அப்போது யாருமே இவரை கண்டு கொள்ளவில்லை . இப்படி இருக்கும் நிலையில் நடிகை சிந்துவின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட கார்த்தி நடிகர் சங்க பொறுப்பில் ,
இருப்பதால் அவருக்கு உதவி செய்ததாக தகவல் வெளியானது . அப்படி நடிகை சிந்துவின் இறுதி சடங்குக்காக 7000 ரூபாய் மட்டும் தான் கொடுத்திருந்தாராம் நடிகர் கார்த்தி. இந்த 7000 ரூபாய் கொடுத்ததற்கே சிந்துவின் இறுதி சடங்குக்கு நாங்கள் உதவி செய்து விட்டோம் என்று பத்திரிக்கையாளர்களிடம் விளம்பரம் தேடி உள்ளார்.
இப்படி மனசாட்சியே இல்லாமல் கார்த்தி செய்த விஷயம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அண்ணன் கோடி கோடியாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துவரும் நிலையில் தம்பி கார்த்திக்கு உதவி செய்ய மனசே இல்லை போல என்று கூறப்படுகிறது…