தற்போது தமிழ் சினிமாவிலேயே மிகவும் பிசியாக இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்தார் . அப்படி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லனாகவும் கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. அந்த வகையில் தமிழ் சினிமாவை கலக்கிய,
ரஜினி ,கமல் , விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து பிரபலமானார் நடிகர் விஜய் சேதுபதி . இப்படி ஹீரோ , வில்லன் , குணச்சித்திர வேடம் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி . இப்படி இருக்கும் நிலையில்,
அந்த நடிகருக்காக சம்பளம் வாங்காமல் கூட நடிப்பேன் என்று கூறியிருந்தார் நடிகர் விஜய் சேதுபதி . அவர் வேறு யாருமில்லை நடிகர் ஷாருக் கான் தான். அந்த வகையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ஜவான். இந்த படத்தில் வில்லனாக,
நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி அப்படி இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்காக 21 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி கூறியதாவது, ஷாருக்கானுக்காக தான் இந்த படத்திலேயே நான் நடித்தேன். அப்படி இந்த படத்திற்காக எனக்கு சம்பளம் தரவில்லை ,
என்றாலும் நான் நடித்துக் கொடுத்திருப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருந்தாலும் விஜய் சேதுபதியின் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக் கான் அவரை நேரில் சந்தித்து பாராட்டி இருந்தார். இதனால் கூட விஜய் சேதுபதி இப்படி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது…