சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா . இவர் கடந்த 2012 ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கெளதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார். இதன் பிறகு பல வருடங்களாக எந்த ஒரு படங்களையும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா,
நேற்று வெளியான லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ,விக்ராந்த் ,கே எஸ் ரவிக்குமார், செந்தில், விக்னேஷ் ,நிரோஷா, ஜீவிதா ,அனந்திகா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தில்,
கெஸ்ட் ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து மாஸ் காட்டி இருந்தார் . நேற்று வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது . இருந்தாலும் இந்த படத்தில் மதங்களை பற்றிய புரட்சிகரமான கருத்தை ,
ஐஸ்வர்யா சொல்லியுள்ளதால் அவருக்கு திருச்சியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஒரு கொடியையே அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அந்த கொடியில் சிவப்பு , மஞ்சள் , பச்சை நிறத்தில் இருக்கும் அந்த கோடியில் “சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்” என்ற,
வசனமும் இடம் பெற்றுள்ளது . மேலும் இந்த கொடி மூன்று மதங்களை குறிப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …