April 30, 2024

வடிவேலுவுக்கு யார் செத்தாலும் கவலையே இல்லை..!! ஆதங்கத்தில் பேசிய நடிகர் ..!! சொந்த நண்பன் சாவுக்கு கூட போகவில்லையா ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர்தான் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து கலக்கிக்கொண்டு வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வந்தார்.  குறிப்பாக இவருடைய காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

என்னதான் சினிமாவில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கையில் பல பேரை கலங்க வைத்து இருக்கிறார் வடிவேலு.  அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே வடிவேலுடன் பல துணை நடிகர்கள் தொடர்ந்து பயணித்து வந்தனர் . அவர்களுக்கு இதுவரை,

எந்த ஒரு உதவியும் வடிவேலு செய்தது கிடையாதாம் . அது மட்டுமல்லாமல் அண்மையில் நடிகர் போண்டாமணி உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார் . அப்போது கூட வடிவேலுக்கு ஒரு ரூபாய் தர கூட மனசு வரவில்லை.  இந்நிலையில் ,

கடந்த சில தினங்களுக்கு முன்பு போண்டாமணி திடீரென இறந்து விட்டார்.  என்னதான் உதவி செய்யவில்லை என்றாலும் நேரிலாவது வந்து அஞ்சலி செலுத்திய இருக்கலாம்.  அது கூட வடிவேலு செய்யவில்லை . இதுகுறித்து வடிவேலுவுடன் நடித்திருந்த நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ்,

கூறியதாவது,  வடிவேலுவுக்கு யார் செத்தாலும் கவலை இல்லை , அவர் யார் செத்தாலும் வரவே மாட்டார் என்று கூறியிருந்தார் . மேலும் வடிவேலுவின் நண்பரும் காமெடி நடிகருமான விவேக் இறந்தபோது கூட வடிவேலு போகவில்லையாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *