தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை திரிஷா . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ,
பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் நடிகை திரிஷா. மேலும் திரிஷா நடிகர் விஜய் உடன் இணைந்து கில்லி ,திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தார் . இதை தொடர்ந்து கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,
வெளியான லியோ படத்திலும் விஜய்யும் , திரிஷாவும் ஒன்றாக நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படத்தின் போதும் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது இந்த படத்தில் இருவரும் லிப்ட்லாக் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள் . அது மட்டுமல்லாமல் ,
சமீபத்தில் திரிஷாவுக்கு ஒரு கோடி மதிப்புள்ள நெக்லஸை விஜய் பரிசாக கொடுத்ததாக தகவல் வெளியானது. இதுவும் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது . இப்படி இருக்கும் நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததும் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
அது என்னவென்றால் நடிகை திரிஷா விஜய்யின் வீட்டு பக்கத்திலேயே 35 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கி இருக்கிறாராம் . இதுவும் தற்போது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது…