இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இசையமைப்பாளராக கலக்கிக்கொண்டு வருபவர் ஏ ஆர் ரகுமான் . குறிப்பாக அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்து சாதனை படைத்தார் ஏ ஆர் ரகுமான். அதோடு இசையமைக்க வந்த 15 வருடங்களிலேயே இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் வென்று சாதனை படைத்தார் .
குறிப்பாக தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே அதற்கு கண்டிப்பாக ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பாளராக இருந்து வருவார் . அவருக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தும் கூட அவருடைய இடத்தை யாராலும்,
நெருங்க கூட முடியவில்லை . ஆனால் சமீப காலமாக இவருடைய இசையும், பாடல்களும் ரசிகர்களை சோதித்து பார்க்கிறது . அந்த வகையில் சமீபத்தில் இவருடைய இசையில் வெளியான பத்து தல, மாமன்னன், அயலான், லால் சலாம் போன்ற படங்களில் பெரிய அளவில் இவருடைய இசை,
பேசப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக ஒரு காலகட்டத்தில் இவர் இசையமைத்த எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இவர் இசையமைத்த படங்களில் ஒரு பாடல் ஹிட் ஆவதே ஆச்சிரியமாக இருந்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால்,
அயலான் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் கூட ரசிகர்களை கவரவில்லை . அதோடு லால் சலாம் படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பார்த்தால் இது ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடலா என்ற சந்தேகமே எழுந்து விடும் . அந்த அளவிற்கு சாதாரண பாடல்களை கொடுத்து வருகிறார்,
ஏ ஆர் ரகுமான் . இதைப் பார்த்த பலரும் இவருக்கு திடீரென என்ன ஆச்சு என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர் . இனிவரும் காலத்திலாவது ஏ ஆர் ரகுமான் பழையபடி செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…