மாரி செல்வராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற சூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்திருந்தார் .
இதைத்தொடர்ந்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு , பகத் பாசில் போன்றவர்களின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தையும் இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ் . மேலும் தொடர்ச்சியாக சாதிகளுக்கு எதிரான படங்களையே கொடுத்து வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ் .
இதனால் ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கினார் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய வீட்டில் பூஜையறையே கிடையாது இன்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மாரி செல்வராஜ் ஒரு நாத்திகவாதியாம் . அவருடைய மனைவியும் இவரைப் போன்று தானாம் .
இதனாலேயே இவர்களுடைய வீட்டில் பூஜை அறை என்று ஒன்று கிடையவே கிடையாதாம். அதற்கு பதிலாக அவர்களுடைய வீட்டில் பன்றி குட்டியின் புகைப்படங்கள் தான் அதிகம் இருக்குமாம் . மேலும் ஒருமுறை இயக்குனர் மாறி செல்வராஜ் வீட்டுக்கு வந்த,
உதயநிதி ஸ்டாலின் என்ன சார் , வீடு முழுக்க ஒரே பன்றி குட்டி போட்டோவா இருக்கு என்று கேட்டிருக்கிறார் . அதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் பன்றி குட்டிகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினாராம்…