தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ராஷ்மிகா கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். இந்தப் படத்திற்கு பிறகு தான் இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
இன்னும் சொல்லப் போனால் இதன் பிறகு தான் நேஷனல் கிராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தார் நடிகை ராஷ்மிகா . இதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ராஷ்மிகா . இந்நிலையில் சமீப காலமாக படங்களில் முத்த காட்சி மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் நடித்து ரசிகர்களை முகம் சுழிக்க வைத்திருந்தார் நடிகை ராஷ்மிகா .
இதனால் ரசிகர்களுக்காக தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் நடிகை ராஷ்மிகா . அது என்னவென்றால் இனிமேல் நயன்தாராவை போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களில் மட்டுமே நடிக்க உள்ளாராம் நடிகை ராஷ்மிகா . அது மட்டுமல்லாமல்,
இனிமேல் கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன் என்றும் அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் நடிகை ராஷ்மிகா . இதனால் வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரத்தை மட்டுமே ராஷ்மிகா தேர்வு செய்து நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது …