தமிழ் சினிமா உலகில் ஓர் தவிர்க்க முடியாத நடிகராகவும் , இசையமைப்பாளராகவும் கலக்கிக்கொண்டு வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ் குமார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிரீடம்,பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன்,அங்காடித்தெரு, மதராசபட்டினம், ஆடுகளம் ,தெய்வத்திருமகள் ,
போன்ற பல தரமான படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இப்படி இசையமைப்பாளராக கலக்கிக்கொண்டு வந்த ஜிவி பிரகாஷ் குமார் டார்லிங் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார், பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,
பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷ் குமார் 100 கோடி கொடுத்தாலும் அந்த விஷயத்தை மட்டும் நான் செய்யமாட்டேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார் .
அது என்னவென்றால் சூதாட்ட விளம்பரம் மற்றும் கூல்ட்ரிங்ஸ் விளம்பரங்கள் தான் .அந்த வகையில் எத்தனை கோடி கொடுத்தாலும் இது போன்ற விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன் என்றும், விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக நடிப்பதற்கு ரெடி என்றும் கூறியிருந்தார் ,
ஜிவி பிரகாஷ் குமார்.குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதே கொள்கையை தான் கடைப்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது …