ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய 170 வது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனராக டி ஜே ஞானவேல் இயக்கிக் கொண்டு வருகிறார் . இந்தப் படத்தை முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம் .
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய படத்தில் அவர் இருக்கக் கூடாது என்று முன்கூட்டியே லோகேஷிடம் சொல்லிவிட்டாராம் சூப்பர் ஸ்டார் அவர் வேறு யாருமில்லை இயக்குனரும் ,லோகேஷின் நண்பருமான,
ரத்னகுமார் தான் . மேயாத மான் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரத்னகுமார் தொடர்ந்து ஆடை , குலுகுலு போன்ற படங்களை இயக்கியிருந்தார் . அதோடு லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ,லியோ போன்ற படங்களிலும் எழுத்தாளராக பணிபுரிந்து இருந்தார் .
இந்நிலையில் சமீபத்தில் நடந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் பருந்து எவ்வளவு உயரம் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்று ரஜினியை தாக்கி பேசியிருந்தார் ரத்ன குமார். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் விஜய்யே கம்முன்னு இருக்கும்போது ரத்னகுமார்,
இப்படி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனால் தன்னுடைய படத்தின் அவர் பணியாற்றக் கூடாது என்று லோகேஷிடம் கூறிவிட்டாராம் சூப்பர் ஸ்டார் . இதை பார்த்த ரசிகர்கள் இதற்குப் பெயர் தான் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதாஎன்று கூறி வருகின்றனர்…