ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டு வந்த ஸ்ரீதிவ்யா பின்னர் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக கலக்கிக்கொண்டு வந்தார். இதன் பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு,
கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது மட்டுமல்லாமல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து ஜீவா,
வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள் ,பென்சில் ,மருது ,காஷ்மோரா போன்ற பல படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீ திவ்யா . பின்னர் ஒரு கட்டத்தில் சுத்தமாக மார்க்கெட் குறைந்துவிட்டதால் சினிமாவை விட்டே விலகி விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா .
இதன் பிறகு பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு ரைடு என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படி இருக்கும் நிலையில் 30 வயதாகும் ஸ்ரீதிவ்யா அதை செய்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வாராம் . அந்த வகையில் ஒரு காலகட்டத்தில்,
மிகப்பெரிய மார்க்கெட்டுடன் இருந்து வந்த ஸ்ரீதிவ்யாவுக்கு தற்போது மார்க்கெட் இறங்கி விட்டதால் மீண்டும் அந்த இடத்தை பிடிக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளாராம்…