April 27, 2024

சிம்பு வால் காணா மல் போன தர மான இயக் கு னர் ..!! 12 வருட மாய் சி னிமா வை விட் டே வில கி இருக் கும் பி ரப லம் ..!! எ ன்ன இருந் தாலு ம் சிம் பு இ ப்படி பண்ணி ருக் க கூ டா து ..??

பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை நடிக்க வந்த புதிதில் எல்லா நடிகர்களும் சரியாகத்தான் நடந்து கொள்வார்கள் . ஆனால் ஒரு சில படங்களை ஹிட் கொடுத்த உடன் அவர்களுடைய நடவடிக்கை அப்படியே  மாறிவிடும் . அப்படி மாஸ் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு சிம்பு செய்த வேலையால் கிட்டத்தட்ட 12 வருடமாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் ஒரு இயக்குனர் .

அவர் வேறு யாருமில்லை இயக்குனர் தரணி தான்.  கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் தரணி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தில், தூள் ,கில்லி ,குருவி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார் .

குறிப்பாக நடிகர் விக்ரமுக்கும் ,விஜய்க்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது இயக்குனர் தரணி தான். இப்படி தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வந்த தரணி கடந்த 2011 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை இயக்கியிருந்தார்.ஆனால் இந்தத் திரைப்படம் சொல்லிக் கொள்ளும்,

அளவிற்கு ஓடவில்லை .  இதற்கு முக்கிய காரணம் நடிகர் சிம்பு தானாம். அந்த வகையில் இந்த படத்தில் சிம்புவின் குறுக்கீடுகள் அதிகமாக இருந்ததாம்.  அது என்னவென்றால் இந்த படத்தில் யாரை ஹீரோயினாக போட வேண்டும் , எந்த நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்தாராம் சிம்பு .

இதனால் இயக்குனர் தரணி தான் நினைத்தபடி அந்த படத்தை எடுக்க முடியாமல் போனதாம் இதனால்தான் இந்தத் திரைப்படம் சொதப்பலில் முடிந்ததாக கூறப்படுகிறது .  இதனால் இந்த படத்திற்கு பிறகு தரணி கடந்த 12 வருடமாக எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *