தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் அஜித் . தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவ் வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் ,
அஜித் சி எம் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறி இருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகரும் , இயக்குனருமான ராஜ்கபூர் தான் . இவர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே போன்ற திரைப்படங்களை,
இயக்கியிருந்தார் . இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜ் கபூர் கூறியதாவது , அப்போதே அஜித் உச்சநட்சத்திரமாக வருவார் என்று கூறினேன். அவர் ஒரு சுயம்பு மாதிரி . ஆனால் அவர் இன்னும் அரசியலுக்கு விதை போடவில்லை . அப்படி மட்டும் அஜித் அரசியலில் ,
கவனம் செலுத்தினால் அவர் தான் அடுத்த முதலமைச்சர் . அது மட்டுமல்லாமல் வரும் காலத்தில் அஜித் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருந்தால் , அவர் முதலமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று அடித்துக்கூறினார் நடிகர் ராஜ்கபூர் .
ஆனால் நடிகர் அஜித் சமூக வலைத்தளப்பக்கத்திற்கு வருவதற்கே விரும்பவில்லை . இவர் எப்படி அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…