தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே கடந்த 1981 ஆம் ஆண்டு லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த் . திருமணமான இவர்களுக்கு ஐஸ்வர்யா ,சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் . இதில் இருவருமே ,
தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா 3 , வை ராஜா வை , லால் சலாம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார் . இவரை தொடர்ந்து சௌந்தர்யாவும் கோச்சடையான் ,வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கி இருக்கிறார் .
ஆனால் இவர்கள் இருவரும் பிறந்த போது பல வருடமாக வெளியிலேயே காட்டாமல் பொத்தி பொத்தி வளர்த்து வந்தாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இதனால் அவருக்கு பிறந்தது ஆண் குழந்தையா.? இல்ல பெண் குழந்தையா .? என்று மீடியாவுக்கும் ,
ரசிகர்களுக்கும் தெரியாமல் இருந்து வந்ததாம் . இதனால் ஒரு கட்டத்தில் மீடியாக்கள் ரஜினிக்கு மாற்றுத்திறனாளி குழந்தை உள்ளது . அதனால் தான் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்திருந்தார் என்றெல்லாம் வதந்திகளை கிளப்பியுள்ளனர் .
அப்போதும் கூட ரஜினிகாந்த் இது குறித்து வாய் திறக்கவில்லையாம். இதன் பிறகு பல வருடங்கள் கழித்து தன்னுடைய இரு மகளையும் ஒரு படத்தின் பூஜையின் போது வெளியில் காட்டியிருக்கிறார் ரஜினிகாந்த்…