May 1, 2024

பாக்யராஜை என் வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி..!! 40 வது திருமண நாளில் பூர்ணிமா உருக்கம் ..!! வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் ..!!

பூர்ணிமா பாக்யராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சில் ஒரு முள் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை பூர்ணிமா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிளிஞ்சல்கள் ,பயணங்கள் முடிவதில்லை ,டார்லிங் டார்லிங் டார்லிங் ,முந்தானை முடிச்சு, நீங்கள் கேட்டவை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை பூர்ணிமா .  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனரும் , நடிகருமான பாக்யராஜை கடந்த 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை பூர்ணிமா . திருமணமான இவர்களுக்கு சரண்யா என்ற மகளும்,

சாந்தனு என்ற மகனும் உள்ளனர் . மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திய பூர்ணிமா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் பாக்கியராஜுக்கும் , பூர்ணிமாவுக்கும் திருமணமாகி ,

40 வருடங்கள் ஆகிவிட்டதாம் . அதை கொண்டாடும் வகையில் கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ,இவரை என்னுடைய வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை பூர்ணிமா. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *