தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த நாளிலிருந்தே தமிழ் பிரபலங்களை எங்கு பார்த்தாலும் இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் செய்தியாளர்கள் . அப்படித்தான் வடிவேலுவிடமும் கேள்வி எழுப்பியுள்ளனர் . அந்த வகையில் விஜய்யும், வடிவேலுவும் இணைந்து பகவதி, வசீகரா, மதுர ,ஃபிரண்ட்ஸ் ,காவலன் ,சுறா, வில்லு ,
போக்கிரி , மெர்சல் போன்ற பல படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு வந்திருந்தார் வடிவேலு . அப்போது பூஜையை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த வடிவேலுவிடம் ,
விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் .? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதிலளித்த வடிவேலு, நீங்களும் வீடியோ எடுத்துக்கொண்டே இருக்காமல் ,புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டியதுதானே? இப்படியே எத்தனை நாள் கேமராவை,
பிடிச்சுகிட்டு வேல பாக்க போறீங்க ,டக்குனு நீங்களும் வந்து ஒரு புதிய கட்சியை ஆரம்பிங்க , எல்லோருமே அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டு போங்க ,யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு வரலாம்,
டி ராஜேந்தர் வந்தார் ,பாக்யராஜ் வந்தார், ராமராஜன் வந்தார் , அதனால் மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம், வரக்கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார் வடிவேலு . தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…