பெரும்பாலும் சினிமா நடிகர்களை பார்த்து தான் ரசிகர்கள் புகை பிடிக்க ஆசை ப்படுகிறார்கள் என்று அப்போதிலிருந்து இப்போது வரை பெரியளவில் பேசப்பட்டு வருகி றது . இதனாலேயே நடிகர்கள் சிகரெட் பிடித்தால் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர்கள் சிகரெட் பிடித்தால் தப்பு இல்லை, நடிகைகள் சிகரெட் பிடித்தால் தப்பா ,
என்று கேள்வி எழுப்பி உள்ளார் பிரபல நடிகை ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை வனிதா விஜயகுமார் தான். கடந்த 1995ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வனிதா . பின்னர் ,
இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை வனிதா . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வனிதா கூறியதாவது ,எல்லோருமே புகை பிடிக்காதீர்கள் , குடிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறார்கள் .
ஆனால் சினிமா வாழ்க்கை வேறு , நிஜ வாழ்க்கை வேறு . அது யாருக்கும் தெரிவதில்லை . மேலும் நடிகர்கள் படங்களில் புகைப்பிடித்தால் அதை ரசிகர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் அதையே ஒரு நடிகை செய்தால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் . ஆனால் நடிகைகள் ,
சிகரெட் பிடிப்பதை நான் ஒரு முன்னேற்றமாகத்தான் பார்க்கிறேன். அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். படத்திற்கு தேவை என்பதால் தான் அப்படி நடிக்கிறார்கள் அதனால் அதை தேவையில்லாமல் சர்ச்சையாக்காதீர்கள் என்று கூறியிருந்தார் நடிகை வனிதா …