ஒவ்வொரு ஆண்டும் பல தேசிய விருதுகளை குவித்து வருகிறது தமிழ் சினிமா. ஆனால் இந்த ஆண்டு வெறும் 4 விருதுகளை மட்டுமே குவித்துள்ளது தமிழ் திரைப்படங்கள். இதனால் தேசிய விருதிலும் அரசியல் உள்ளது என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் முதன் முதலில் தேசிய விருது வாங்கிய இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் அந்த காலத்தில் பல தரமான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் ,
இருந்து வந்தனர் . இருந்தாலும் அப்போது அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை . இன்னும் சொல்லப்போனால் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய தூண்களாக இருந்து வந்தனர். இருந்தாலும் இவர்களுடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததே தவிர ,
அவர்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. அப்படி தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக தேசிய விருதை அஜித் பட இயக்குனர் ஒருவர் தான் வாங்கி இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை இயக்குனர் அகத்தியன் தான் . கடந்த 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதல் கோட்டை.
இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . குறிப்பாக இந்த திரைப்படம் திரைக்கதைக்காக பெரிய அளவில் பேசப்பட்டது . அப்படி இந்த திரைப்படம் மொத்தம் மூன்று தேசிய விருதுகளை குவித்தது . அந்த வகையில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை தமிழ் சினிமாவிலேயே முதன் முறையாக ,
இயக்குனர் அகத்தியன் தான் வென்றார் . இதன்பிறகு தான் லெனின், பாலா, வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் தேசிய விருதை வென்றிருந்தனர் என்பது குறிப்பிட த்தக்க து.இரு ந்தாலும் தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்தது அப்போது பெரிய விஷயமாக பேசப்பட்டது…