தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா . கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஆல்யா மானசா . இந்த சீரியல் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துக் கொண்டு வந்தார் ,
நடிகை ஆல்யா மனசா . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே ராஜா ராணி சீரியலில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஆல்யா மானசா. திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேலும் கணவரின் பிறந்த நாளாக இருந்தாலும் சரி , இவருடைய பிறந்த நாளாக இருந்தாலும் சரி கண்டிப்பாக ஒரு கார் வாங்கி விடுவார்கள் . இதனால் இவர்கள் குறுக்கு வழியில் சம்பாதித்து தான் இப்படி பணக்காரராக ஆகியிருப்பார்கள் என்று பலரும் கூறியிருக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய ஆல்யா மானசா கூறியதாவது, நான் புது வீடு கார் வாங்கி விட்டேன் என்றெல்லாம் பலரும் மீடியாவில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது எல்லாமே இஎம்ஐ என்பது எத்தனை பேருக்கு தெரியும் இன்னைக்கு எங்கள் இருவருடைய பெயரிலும் கடன் இருக்கிறது .
மேலும் அந்தக் கடனை கட்டுவதற்கு எங்களிடம் சக்தியும் இருக்கிறது. அதனால் தான் எங்களுக்கு கடன் கிடைக்கிறது மேலும் குறுக்கு வழியில் சம்பாதித்து தான் பணக்காரர்களாக ஆகணும் என்ற நினைப்பு எங்களுடைய ரத்தத்திலே கிடையாது என்று கூறியிருந்தார் நடிகை ஆல்யா மானசா…