May 5, 2024

பிரம்மாண்ட இயக்குனருக்கே இப்படியொரு நிலைமையா ..?? தெலுங்கு சினிமாவிற்கு போய் இப்படி அவமானப்படுகிறாரே..!! ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் ..!!

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் கொடிகட்டி  பறந்து வந்தவர் இயக்குனர் ஷங்கர் .ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷங்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் தொடர்ச்சியாக காதலன், இந்தியன், ஜீன்ஸ் ,முதல்வன் ,அந்நியன், சிவாஜி, எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட்,

படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  இன்னும் சொல்ல போனால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய பெருமை ஷங்கரையும் சேரும் . அந்த அளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி,

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருந்தார். ஆனால் தமிழில் வரவேற்பு இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் தஞ்சமடைந்தார் ஷங்கர் . அந்த வகையில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை பல வருடமாக இயக்கி வருகிறார் ஷங்கர் . இதன் பிறகு தான் மீண்டும்,

இந்தியன் 2 படத்தை தொடங்கினார்.  இப்படி இருக்கும் நிலையில்  ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட்களை ஷங்கர் வெளியிடவில்லை. இதனால் ஷங்கரின் மீது மிகப்பெரிய கோபத்தில் இருந்து வருகிறார்களாம் தெலுங்கு ரசிகர்கள்.

இன்னும் சொல்லப்போனால் மோசமான மீம்களை போட்டு ஷங்கரை கலாய்த்து வருகிறார்களாம் .  இதை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் தெலுங்கு சினிமா பக்கம் போய் இப்படி அவமானப்படுகிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *