சரவணன் அருள் ஓர் பிரபலமான தொழிலதிபர் ஆவார். தற்போது தமிழ்நாட்டின் முக்கிய தொழிலதிபர்களின் ஒருவராக இருந்து வரும் சரவணன் அருள் சரவணா ஸ்டோர்ஸ் என்ற சாம்ராஜ்யத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வருடம் வெளியான தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சரவணன் அருள்.
இந்த படத்தை உல்லாசம் மற்றும் விசில் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தனர் . ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரத்திற்காக,
இவரை சந்தித்த இயக்குனர்கள் நீங்களே நடித்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று அண்ணாச்சியின் ஆசையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளனர் .. இதன் பிறகு தான் அவருக்கு நடிக்கும் ஆசை வந்ததாம் . அப்படி விளம்பரப் படங்களில் நடித்து வந்த அண்ணாச்சி,
தன்னுடைய சொந்த தயாரிப்பில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக பல கோடிகளை வாரி இறைத்தார் அண்ணாச்சி . அப்படி இதுவரை கடை விளம்பரத்துக்காகவும், தன்னுடைய படத்திற்காகவும் 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறாராம்,
அண்ணாச்சி . அப்படி செலவு செய்தும் கூட அவருக்கு கெட்ட பெயர் கிடைத்தது தான் மிச்சம். இனியாவது இவர் உஷாராக இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …