தற்போது தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இருப்பவர் நடிகர் விஜய் . தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அண்மை காலமாக அரசியலில் வருவதற்காக தீயாய் வேலை செய்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.
அந்த வகையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவிகளை நேரில் சந்தித்து பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கியிருந்தார். குறிப்பாக இளைஞர்களின் ஓட்டை வாங்குவதற்காக தான் விஜய் இப்படி செய்தார் என்று கூறப்படுகிறது .
அது மட்டுமல்லாமல் இரவு நேர பாடசாலை ஒன்றையும் ஆரம்பிக்க இருக்கிறார் நடிகர் விஜய். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து கணித்திருக்கிறார் பிரபல ஜோதிடரான சீதா சுரேஷ் . அந்த வகையில் அவர் கூறியதாவது , நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் .
ஆனால் சுக்கிரன் தோஷம் முடியும் வரை சினிமாவில் தான் இருப்பார் விஜய் . ஆனால் அரசியல் வேலைகளை செய்து கொண்டு தான் இருப்பார் . மேலும் விஜயகாந்துக்கு விருச்ச லக்கனம் இருப்பதால் சந்திர மங்கள் யோகம் இல்லை. மேலும் விஜயகாந்துக்கு சந்திரன் செவ்வாய் சேர்ந்திருக்கும் .
அது மட்டுமல்லாமல் விஜய் அவரே கட்சி ஆரம்பித்து நின்றால் ஜெயிக்க முடியாது. அவரை எதிர்த்து யாராவது நின்று விஜய்யை தோற்கடித்து விடுவார்கள். இதனால் விஜய் , விஜயகாந்த் உடன் இணைந்து செயல்பட்டால் சரியாக வரும் என்று கூறியிருந்தார்…