April 29, 2024

என்னை பற்றி முழுசா தெரிஞ்சா யாருமே கிட்ட வர மாட்டீங்க ..!! வெளிப்படையாக சொல்லிய அரவிந்த்சாமி ..!! இவருக்கு இப்படியொரு முகமா ..??

அரவிந்த்சாமி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தொழிலதிபர் ஆவார் . கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய  திரைப்பயணத்தை தொடங்கினார் அரவிந்த்சாமி . பின்னர் அடுத்த வருடமே மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மறுபடியும் ,தாலாட்டு, பாசமலர்கள், டூயட், பாம்பே, இந்திரா ,மின்சார கனவு போன்ற பல படங்களில் நடித்திருந்தார்  நடிகர் அரவிந்த்சாமி . இன்னும் சொல்லப்போனால் அப்போது இருந்த பல பெண்கள் அரவிந்த்சாமி மீது பித்து பிடித்துப்போய்,

இருந்து வந்தார்கள் . அந்த அளவிற்கு தன்னுடைய அழகால் ரசிகர்களை மயக்கி இருந்தார் அரவிந்த்சாமி . பின்னர் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த அரவிந்த்சாமி பின்னர் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்,

கலந்து கொண்ட அரவிந்த்சாமியிடம் பெண்களுக்கு ஏன் உங்களை இந்த அளவிற்கு பிடித்து இருக்கு என்று கேட்டுள்ளனர்.  அதற்கு பதில் அளித்த அரவிந்த்சாமி , என்னுடைய உண்மையான கேரக்டர் தெரிந்தால் யாருமே என்னை பார்க்க வர மாட்டாங்க . குறிப்பா என்னைப் போல மாப்பிள்ளை,

வேண்டும் என்றும் சொல்ல மாட்டார்கள்.  என்னைப் பற்றி முழுசா எங்க அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும் . அவரை கேட்டுப் பாருங்க எல்லாத்தையும் சொல்லுவார் என்று கூறியிருந்தார் அரவிந்த்சாமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *