தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு நல்ல பெயர் இருந்து வந்தது . ஆனால் அதெல்லாம் ஒரே நாளில் மாறியதுதான் அதிர்ச்சியான விஷயமே . அந்த வகையில் சிவகார்த்திகேயன் டி இமானுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என்று ,
அண்மை காலமாக இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இந்த ஒரே காரணத்தினால் பிரபல நடிகரின் வீட்டு விசேஷத்திற்கு வர மறுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன் . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் யோகி பாபு தான். சிவகார்த்திகேயனும் ,
யோகி பாபுவும் இணைந்து மான் கராத்தே, காக்கி சட்டை ,டாக்டர் மற்றும் அயலான் போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இப்படி இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகி பாபுவின் மகளுக்கு,
முதல் பிறந்தநாள் கோலாகலமாக நடந்திருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகர்கள் கலந்து கொண்டனர் . குறிப்பாக சிவகர்த்திகேயனுக்கும் அழைப்பு கொடுத்து இருக்கிறார் யோகி பாபு.
ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு வந்தால் பத்திரிக்கையாளர்கள் சர்ச்சை கேள்விகளை யாராவது கேட்டு விடுவார்களோ என்று பயந்து அந்த நிகழ்ச்சிக்கு வர மறுத்து விட்டாராம் சிவகார்த்திகேயன்…