April 30, 2024

கேப்டன் என் கூடவே இருக்கணும் ..!! விஜயகாந்தின் முகத்தை கையில் டாட்டூவாக போட்டுக்கொண்ட பிரேமலதா ..!!

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் ஆவார் . மேலும் பிறப்பால் பணக்கார வீட்டுப் பிள்ளையாக பிறந்தாலும் சினிமாவில் கஷ்டப்பட்டு தான் மேலே வந்திருக்கிறார் விஜயகாந்த்.  மேலும் ஆரம்ப காலகட்டங்களில் பல கஷ்டங்களை சந்தித்ததால் இவர் மேலே வந்த பிறகு வளர்ந்து வரும் பல கலைஞர்களை தூக்கி விட்டு அழகு பார்த்தார் .

இதனால் தான் ரசிகர்கள் இப்போதும் கேப்டன் விஜயகாந்த் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் . அதோடு அரசியலிலும் களமிறங்கி ஒரு கை பார்த்தார் விஜயகாந்த் . இப்படி சினிமா, அரசியல் என்று கலக்கிக்கொண்டு வந்த விஜயகாந்துக்கு,

ஒரு கட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது . இதனால் பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திடீரென இறந்து விட்டார் . இவருடைய திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

இதனிடையே கடந்த 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் விஜயகாந்த் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும்,

என்பதற்காக அவருடைய முகத்தை தன்னுடைய கையில் டாட்டூ போட்டு இருக்கிறார் பிரேமலதா . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *