May 11, 2024

இருக்கறப்ப ஒன்னும் கொடுக்கல ..!! இப்ப இப்படியொரு விருதா ..?? விஜயகாந்துக்கு உயரிய விருதை அறிவித்த மத்திய அரசு ..!!

கடந்த வருடம் இறுதியில் மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது கேப்டன் விஜயகாந்தின் இறப்பு தான் . மேலும் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த் . இதனால் இவருடைய பிறந்த நாளில் மட்டும் ரசிகர்களை சந்திப்பார் . இப்படி இருந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார் விஜயகாந்த் .

இவருடைய திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .  இதற்கு காரணம் அவர் வாழ்ந்த வாழ்க்கை தான் . உதவி என்று கேட்டால் இல்லை என்ற பதிலே அவரிடம் வராது . மேலும் விஜயகாந்த் முதலமைச்சராகவும் ,

வந்திருக்க வேண்டியவர்.  இடையில் மீடியாக்கள் செய்த வேலையால் அவருடைய பெயர் அப்படியே தலைகீழாக மாறியது . இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது மத்திய அரசு . மேலும் தமிழ் சினிமாவை,

கலக்கி வந்த ரஜினி, கமல் , வைரமுத்து போன்ற பல பிரபலங்களுக்கு பத்மபூஷன் கொடுத்த மத்திய அரசு கேப்டன் விஜயகாந்த் இறந்ததற்கு பிறகு கொடுக்க உள்ளது வருத்தமான விஷயம்தான் . மேலும் கேப்டனுக்கு பத்மபூஷன் விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது என்று,

தன்னுடைய வேதனையை தெரிவித்து இருந்தார் அவருடைய மனைவியான பிரேமலதா . இருந்தாலும் கேப்டன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இதை நினைத்து சந்தோஷப்பட்டு இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *