தமிழ் சினிமா உலகில் விவேக் , வடிவேலுவுக்கு பிறகு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்தவர் தான் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானம் பேசாத கண்ணும் பேசுமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில்,
பிரபலமானது சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் மூலம் தான் . இந்த படத்தில் காமெடி நடிகர் கவுண்டமணியும் நடித்திருந்தார் . ஆனால் இந்த படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் அவனுக்கெல்லாம் எதுக்கு வாய்ப்பு கொடுக்கிற என்று சிம்புவிடம் சண்டைக்கு ,
போனாராம் நடிகர் கவுண்டமணி . அதற்கு காரணம் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் தமிழ் படங்களை கேலி செய்யும் விதமாக நடித்திருந்தார் நடிகர் சந்தானம் . அப்படி நம்ம கஷ்டப்பட்டு எடுக்கிற படத்தை இவங்க ஈசியா கிண்டல் பண்ணி வீடியோ போடுறாங்க, அவனுக்கு எதுக்கு,
வாய்ப்பு கொடுக்கிற என்று சிம்புவிடம் சொன்னாராம் காமெடி நடிகர் கவுண்டமணி. ஆனால் சிம்புவுக்கு சந்தானத்தை ரொம்ப பிடிக்குமாம் . அதனால் அவர் மீது நம்பிக்கை வைத்து மன்மதன் படத்தில் நடிக்க வைத்திருந்தாராம் நடிகர் சிம்பு . அது மட்டுமல்லாமல் மன்மதன்,
படத்தில் சந்தானம் நடித்திருந்த காட்சிகளை அதிகம் வைக்க சொல்லி , கவுண்டமணி நடித்திருந்த காட்சிகளை நீக்கி விட்டாராம் நடிகர் சிம்பு . அப்படி அன்று சிம்பு நம்பிக்கை வைத்ததால் தான் இன்று ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார் நடிகர் சந்தானம்…