தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும் , நடிகராகவும் கொடி கட்டி பறந்து வந்தவர் பாண்டியராஜன் . இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் மட்டும்தான் சினிமாவில் இருந்து வருகிறார். அவர் பெயர் பிரித்வி ராஜன் . கடந்த 2௦௦6 ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான கைவந்த கலை என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பிரித்வி ராஜன்.
ஆனால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து நாளைய பொழுதும் உன்னோடு, பதினெட்டான்குடி எல்லை ஆரம்பம் ,வாய்மை ,சகா ,காதல் முன்னேற்ற கழகம், லாபம், டிஎஸ்பி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் ஒரு படம் கூட இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரவில்லை . இதை அடுத்து சமீபத்தில் இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் , சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக அசோக் செல்வன், சாந்தனுவை தாண்டி பிரித்வி ராஜனின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது . இன்னும் சொல்ல போனால் 18 வருட போராட்டத்திற்குப் பிறகு இவருக்கு ப்ளூ ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது .
இப்படி இருக்கும் நிலையில் தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அந்த வெற்றியை கொண்டாடி இருக்கிறார் பிரித்வி ராஜன் . அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிரித்வி ராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…