தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமான நடிகர் என்றால் அது மன்சூர் அலிகான் தான். ஆரம்பத்தில் வில்லனாக கலக்கிக்கொண்டு வந்த மன்சூர் அலிகான் தற்போது ஒரு சில படங்களில் காமெடியனாகவும் நடித்துக் கொண்டு வருகிறார் . அப்படி அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மன்சூர் அலிகான்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் , திரிஷாவுடன் நடிக்கப் போகிறோம் என்று ஜாலியாக இருந்தேன். குறிப்பாக குஷ்பு ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷாவையும் கட்டிலில் தூக்கிப் போடலாம் என்று இருந்தேன் .
ஆனால் திரிஷாவை கண்ணில் கூட காட்டவில்லை என்று மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார் மன்சூர் அலிகான் . எப்போதும் போல விளையாட்டாக பேசிய மன்சூர் அலிகானுக்கு இந்த விஷயம் வினையாக வந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இதை பார்த்து கொந்தளித்த,
திரிஷா , அவர் என்னை அசிங்கமாக பேசி இருக்கிறார் . இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் , மிகவும் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் பேசி இருக்கிறார் . மேலும் இதுவரை அவருடன் நான் நடித்ததில்லை . இனிமேல் எப்போதும் அவருடன் நடிக்க மாட்டேன் .
மனித சமுதாயத்திற்கு இவரை போன்ற நடிகர்கள் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று கொந்தளித்து இருந்தார் திரிஷா. மேலும் இதைப் பார்த்தல் லியோ படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜும் திரிஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்…