தற்போது நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலிலும் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அதற்காக இப்போதே தன்னுடைய ரசிகர்களை வைத்து பல வேலைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய் . இதனால் கண்டிப்பாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய்யின் முதலமைச்சர் கனவுக்கு ஆப்பு வைத்திருக்கிறார்,
பிரபல நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் தான் . தமிழ்நாட்டில் எப்படி விஜய்யோ , அதேபோன்றுதான் தெலுங்கு சினிமா உலகில் நடிகர் பவன் கல்யாண். இவருக்கும் அங்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர் . மேலும் இவரும் பல வருடமாகவே ,
அரசியலில் இருந்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் பவன் கல்யாண் போட்டியிட்ட தொகுதி டெபாசிட் இழந்து படுதோல்வியை அடைந்திருக்கிறதாம் . குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறார் பவன் கல்யாண்.
அவரே டெபாசிட் இழந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அது மட்டுமல்லாமல் விஜய்யை விட அவருக்கு ரசிகர்கள் அதிகம். அப்படிப்பட்ட இவருக்கே இப்படி ஒரு தோல்வி என்றால் விஜய்யின் நிலைமை என்னாவது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .
இன்னும் சில பேர் இதனால்தான் ரஜினி அரசியல் வாழ்க்கையிலிருந்து பின் வாங்கி விட்டார் என்றும் கூறி வருகின்றனர். இதை பார்த்தாவது விஜய் முன் வைத்த காலை பின் வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் …